இலங்கையின் எல்லா இடங்களிலும் மின் தடை உள்ளது
#SriLanka
#Electricity Bill
#Power
Mugunthan Mugunthan
2 years ago
தீவின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையிடம் வினவின போது....
எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தேசிய மின்வட்டத்தில் 300 மெகாவோட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தீவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்கும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.