இன்றைய வேத வசனம் 16.01.2022
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஒருமறை வழக்கம்போலவே தெரு ஊழியத்துக்குச் சென்ற நான் தெருமுனையில் ஒருவர் விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி நிற்பதை கண்டேன்.
அவரருகே சென்று "நீர் ஒரு கிறிஸ்தவரா?" என்று கேட்டேன். அந்த மனிதர் என்மீது கோபப்பட்டு, என்னைக் கடுமையாக சபிக்கத் துவங்கினார்.
"நான் யாராக இருந்தால் உனக்கென்ன? உன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு போ" என்று அவர் கத்தினார்.
அவர் யார் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், நான் யார் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.
அவர் தன்னுடைய நண்பரிடம் இதைப்பற்றிச் சொல்லி, அவரை என்னிடம் அனுப்பிவைத்தார்.
வாழ்க்கையில் எவரும் செய்யாதவாறு நீ அவனை இழிவு படுத்திவிட்டதாக அவன் நினைக்கிறான்" என்று அவர் கூறினார்."
ஒருவேளை நான் தவறு செய்திருக்கலாம். என்றாலும் நான் அவருக்காக ஜெபிக்கிறேன் என்று சொல்லி அந்த நண்பரை அனுப்பிவைத்தேன்.
அதன் பின்பு ஒருநாள் இரவு, நள்ளிரவுக்குப் பிறகு என்னுடைய அறைக் கதவு தட்டப்பட்டது. வியப்போடு கதவைத் திறந்தேன் நான்.
அங்கே முன்பொரு நாள் நான் தெருமுனையில் கண்டிருந்த அந்த மனிதர் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் அவர் கண்களில் நீர் வழிந்தது.
பிரதர், என்னைத் தெரிகிறதா? மூன்று மாதங்களுக்கு முன்னால் தெருமுனையில் நான் நின்றுகொண்டிருந்தபோது, என்னோடு பேசினீர்களே? அன்று நான் உங்களைக் கடுமையாகச் சபித்துவிட்டேன்.
அன்றிரவிலிருந்து எனக்குச் சமாதானமேயில்லை. என்னால் சரியாகத் தூங்கமுடியவில்லை. நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவன் அழுதபடியே கேட்டார்.
நானும் அவரும் அங்கேயே வாசல்படியில் முழங்காற்படியிட்டு ஜெபித்தோம். அவனர் தன்னுடைய பாவங்களைக் கண்ணீரோடு அறிக்கையிட்டார்.
அடுத்த நாள் மதியம் நடைபெற்ற ஜெபக் கூட்டத்தில் அவர் கிறிஸ்துவைத் தனது இரட்சகராக அறிக்கையிட்டார். அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது.
சமீபத்தில் ஒரு விபத்தில் காயப்பட்டு மரித்துப்போனார் என்று நான் கேள்விப்பட்டேன். என்றாலும் ஒருநாள் தேவனுடைய ராஜ்யத்தில் நான் அவரைக் காண்பேன் என்ற விசுவாசம் எனக்கு இருக்கிறது.
வழியருகே விதைக்கப்பட்ட விதையாக இருந்தாலும் தேவன் அற்புதவிதமாக அறுவடையைக் கொடுத்திருக்கிறார்! ஆமென்!!
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் (#லூக்கா 8:15)
அறுப்பு மிகுதி , வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் , அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் (மத்தேயு 9.37-38).