நீ இல்லாத உலகில்

Keerthi
4 years ago
நீ இல்லாத உலகில்

அம்மா
பனித்துளிப்போல்
உன் பாசம்
சூரியக்கதிர் போல்
உன் கண்டிப்பு ஆதலால்
வளர்ந்து மலர்ந்து
மனம் வீசுகிறோம் பூக்களாய்
இன்று நாங்கள்

அம்மா
உலக வாழ்வில் நானறிந்த
ஒரே புனிதமான வார்த்தை
தாய்ப்பாசம்
மற்ற பிள்ளைகளையும்
தான் பெற்ற பிள்ளைகளைப்போல்
நீ வளர்த்ததால்
அந்த தாய்ப்பாசமே
உன்னால் மேலும் புனிதமடைந்தது

அம்மா
நீ என்றும் நிரந்தரமானவள்
உன் அன்பு நிரந்தரம்
உன் அரவணைப்பு நிரந்தரம்
உன் நேசம் நிரந்தரம்
உன் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில்
என்றென்றும் நிரந்தரம்

அம்மா
என் சிந்தனைப் பூக்கவில்லை
என் செவிகளுக்கும் ஏதும் கேட்கவில்லை
மை சிந்தும் என் பேனா
இன்று கண்ணீர் சிந்துகிறது
வெந்து வெதும்பி நிற்கிறேன் நீயில்லாமல் என் தாயில்லாமல்

அம்மா
உலகத்தில்
தங்கங்களின் வகை ஐந்து
ஆறாவது ஒன்றிருந்தால் அது நீயே
மணிகளின் வகை ஒன்பது
பத்தாவது ஒன்றிருந்தால் அது நீயே
அதிசயங்களின் வகை ஏழு
எட்டாவது ஒன்றிருந்தால் அது நீயே
பூக்களின் வகை தொன்னூற்றோன்பது நூறாவதாக
ஒன்றிருந்தால் அது நீயே

அம்மா
எனக்கு யாரிருந்தால் என்ன பயன்
நல்ல பேரிருந்தால் என்ன பயன்
சொத்திருந்தால் என்ன பயன்
நல்ல சுகமிருந்தால் என்ன பயன்
நீ இல்லாத இவ்வுலகத்திலே...

உலகுக்கு பொறுமையை
சொல்லித் தந்த கிறிஸ்து ஏயேசுவின்
வழி வளர்ந்த தாயே உம் புகழ் வாழ்க...!


*தாயை பிரிந்து வாடும்
குடும்பத்தில் ஒருவனாக
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4