கனடாவை கடவுள் கைவிட்டு விட்டாரா? ஆம் கனடாவில் நடப்பதுதான் என்ன? குளிரால் இருளில் மூழ்கிய சில கிராமங்கள்
Prasu
2 years ago
கனடாவின் நோவா ஸ்கொடியாவில் கடும் பனிபொழிவு மற்றும் மழை காரணமாக 44,000கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோவா ஸ்கோடியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வீசிய கடும் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நோவா ஸ்கொடியாவில் 44,000 குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.