திடீரென முடங்கிய டுவிட்டர் வலைதளம் - அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகார்

Prasu
4 years ago
திடீரென முடங்கிய டுவிட்டர் வலைதளம் - அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகார்

உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது.  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது, நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4