2 டோஸ் போட்டால். எங்க நாட்டுக்கு வரலாம்.. அனுமதி அளித்த அரசு.!!!
Keerthi
2 years ago
ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் சுற்றுலா வர அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வர அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் மாணவர்கள், பணியாளர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் தனிமைபடுத்துதலில் இருந்து விலக்கு அளித்து அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டிற்குள் வர அனுமதி மற்றும் அவர்களுக்கான தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.