தடுப்பூசி மீது அதிகாரிகள் முழு நம்பிக்கை; PHI வருத்தம்

Mayoorikka
2 years ago
தடுப்பூசி மீது அதிகாரிகள் முழு நம்பிக்கை; PHI வருத்தம்

தடுப்பூசி மீது முழு நம்பிக்கையுடன் அதிகாரிகள் எடுக்கும் சில தீர்மானங்களினால் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசிகளுக்கு உணர்திறன் இல்லாத புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகும் அபாயம் இருப்பதாக அதன் தலைவர் உபுல் ரோஹண, கூறியுள்ளார்.

எனவே தடுப்பூசிகளின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.