உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒளிர விடப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி..!!!

Keerthi
2 years ago
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒளிர விடப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி..!!!

அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந் நாட்டு கொடி நிறத்தில் ஒளிர விடப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்றும் 6-வது நாளாக இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான தாக்குதலுக்கு, உலகிலுள்ள பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா- கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியானது தேசியக் கொடியின் நிறத்தில், அதாவது நீலம், மஞ்சள் என ஒளிர செய்து, உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ரஷ்ய படையெடுப்பை எடுத்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீர்வீழ்ச்சியில் அந்த நிறங்கள் ஒற்றுமையை குறிக்கும் வகையிலும் ஒளிர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.