எதிரிகளைக் கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு உக்ரைனில் அதிரடி அறிவிப்பு..!!!!

Keerthi
2 years ago
எதிரிகளைக் கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு உக்ரைனில் அதிரடி அறிவிப்பு..!!!!

உக்ரைனில் பெலாரஸ் படைகள் சூழ்ந்துள்ள நிலையில், எதிரிகளைக் கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு வழங்கவுள்ளதாக செர்னிஹவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் தம் தாயகத்தை பாதுகாப்பதற்காக கையில் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். மேலும் உக்ரைன் சிறையிலுள்ள, கைதிகளை விடுவித்து ரஷ்ய வீரர்களுடன் எதிர்த்து போராட உள்ளதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகள், ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு செர்னிஹவ் நிர்வாகமானது, உக்ரைனில் உள்ள செர்னிஹவ் பகுதியில் நுழைந்துள்ள எதிரிகளை கொலை செய்தால், அவருக்கு 300 டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏனெனில் பெலாரஸ் படைகள் நுழைந்துள்ளதால் செர்னிஹவ் நிர்வாகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் உள்ள குப்பியன்ஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டு அப்படைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.