டீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Mayoorikka
2 years ago
டீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

நாட்டிற்கு வந்தடைந்துள்ள கப்பலின் டீசல் தரையிறக்கும் பணி இன்று முதல் இடம்பெறவுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி சிரமப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 30,000 மெட்ரிக் டன் ஆட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் உள்ளது. டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்னும் இரண்டு நாட்களில் நாட்டிற்கு வர உள்ளது.

எனவே ,அநாவசியமாக பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.