மக்கள் தாக்குவார்கள் என்ற பயத்தில் பாராளுமன்ற பேருந்துகளின் பெயர்ப் பலகைகள் நீக்கம்

Prathees
2 years ago
மக்கள் தாக்குவார்கள் என்ற பயத்தில் பாராளுமன்ற பேருந்துகளின் பெயர்ப் பலகைகள் நீக்கம்

நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் 'பாராளுமன்ற ஊழியர்கள்' என்ற பதாகையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளை தாக்கலாம்என்ற  சந்தேகமே இதற்குக் காரணம்.

ஒன்பது இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.