200 கேஸ் சிலிண்டர்களை எடுத்த அமைச்சர்.. காஸ் வரிசை போர்க்களம்.. கட்டுப்படுத்த எஸ்டிஎஃப் வரவழைப்பு

Prabha Praneetha
2 years ago
 200 கேஸ் சிலிண்டர்களை எடுத்த அமைச்சர்.. காஸ் வரிசை போர்க்களம்.. கட்டுப்படுத்த எஸ்டிஎஃப் வரவழைப்பு

இராஜாங்க அமைச்சர் ஒருவர் சுமார் 200 எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டி, எரிவாயு வரிசையில் நின்ற மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி, ரத்கம பிரதேசத்தில் எரிவாயு வரிசையில் நின்ற குழுவினரால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இப்பகுதிக்கு 2500 காஸ் சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த வாரம் 500 சிலிண்டர்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அங்கிருந்த பிரதிநிதி ஒருவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

ஆனால், போலீசார் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.