மூன்றாக மடிக்ககூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சாம்சங்

#technology
Prasu
4 years ago
மூன்றாக மடிக்ககூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z Flip, கேலக்ஸி Z Fold ஆகிய மடிக்கக்கூடிய போன்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 3-ஆக மடிக்ககூடிய சாம்சங் போனையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனில் ரோலபிள் டிஸ்பிளே அல்லது 3-ஆக மடிக்கக்கூடிய டிஸ்பிளே இருக்கும் என்றும், குறைந்த அளவில் மட்டுமே இந்த போன் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு B4 மற்றும் Q4 என்ற கோட்நேம் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாம்சங் இந்த வருட தொடக்கத்தில் பிளக்ஸ் எஸ், ஃபிளக்ஸ் ஜி மற்றும் ஃபிளக்ஸ் சிலைடபிள் என்ற 3 ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தியது. இந்த போன்கள் மடிக்கக்கூடியதாகவும் இருந்தது. இந்நிலையில் இந்த போன்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமே ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4