றம்பொட நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மூவர்: தேடும் நடவடிக்கை தீவிரம்
Mayoorikka
3 years ago

நுவரெலியா – றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.
அதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



