தென் கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப் பொருட்கள்: ஆறு பேர் கைது
Prathees
2 years ago
இன்று காலை தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து இந்த சரக்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.