காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
Prathees
3 years ago

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற கட்சி சார்பற்ற போராட்டத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



