மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Mayoorikka
2 years ago
மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாட்டில் பயன்படுத்தப்படும் 14 உயிர்காக்கும் மருந்துகளில் 37 மற்றும் 376 அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது மருத்துவ விநியோக பிரிவுகள் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

486 அத்தியாவசியமற்ற மருந்துகளில் 45 மருந்து விநியோகப் பிரிவில் இல்லை என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையை தணிக்க சுமார் 90 நாட்கள் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மருந்துப் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.