காபோவைதரரேற்று நிறைந்த உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

#Cooking #Vegetable #Biryani
காபோவைதரரேற்று நிறைந்த உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 4,
  • பாஸ்மதி அரிசி - 1 கப்,
  • வெங்காயம் - 2,
  • தக்காளி - 2,
  • பச்சை மிளகாய் - 2,
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்,
  • பட்டை - 2, கிராம்பு - 3,
  • ஏலக்காய் - 3,
  • அன்னாசி பூ , பிரியாணி இலை - 1,
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
  • கொத்தமல்லி, புதினா - 1/4 கப்,
  • கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
  • உப்பு - தேவைக்கு.
  • எண்ணெய், நெய் - 1/4 கப்,

செய்முறை

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதன்பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின் உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். 
  3. பின் தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும். 
  4. சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.
  5. இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4