கப்புட்டு காக்கா காக்கா பசில்.. பசில்.. என்ற ஒலியால் வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

Nila
2 years ago
கப்புட்டு காக்கா காக்கா பசில்.. பசில்.. என்ற ஒலியால் வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

இலங்கையில் வாகனங்களில் எழுப்பும் ஒலி காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
தற்போது வாகன சாரதிகள் மத்தியில் பிரபலமாகியுள்ள கப்புட்டு காக் காக் காக் பசில் பசில் என்ற தாளத்தில் எழுப்பும் ஒலியினால் இந்த பாதிப்பு ஏற்படும் என  இயந்திர பொறியியலாளர் முர்த்தி தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.
 
நீண்ட நேரம் வாகனங்களின் ஒலியை எழுப்பும் போது இந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
 
ஒலி கருவியின் மின் கம்பிகள் ஊடாக அதிகமாக மின்னோட்டம் பாய்வதால், வாகனம் தீப்பிடிக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
சாதாரணமாக சில நொடிகள் பயன்படுத்தும் வகையிலேயே வாகனங்களுக்கான ஒலிக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
 
அதனை நீண்டநேரம் ஒலிக்க செய்வதன் காரணமாக அதிகளவான மின்னோட்டம் மின் கம்பிகள் ஊடாக பயணித்து தீப்பற்றக் கூடும் எனவும் முர்த்தி தேவசுரேந்திர கூறியுள்ளார்.
 
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமான பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கப்புட்டு காக்கா காக்கா பசில் பசில் என்ற கோஷத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.