பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள்!

Nila
2 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள்!

நேற்றுமுன்தினம் 6வது தடவையாக பிரதமராக பதவியேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி தற்போது ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

அந்தவகையில் நேற்றையதினம் பிற்பகல் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் ஏற்படாத நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் குழுவினர் கலைந்து சென்றனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீடு செல்லும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் அறிவித்துள்ளனர்.