கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரண பந்தல்கள் சாய்ந்து விழுந்தன!

Mayoorikka
2 years ago
கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரண பந்தல்கள் சாய்ந்து விழுந்தன!

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரண பந்தல்கள் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீசிய பலத்த காற்றில் சிக்கிய குறித்த பந்தல் பின்னோக்கி சாய்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த பந்தல் 25ஆவது தடவையாக வியாபாரிகள் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.