முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் - ரணிலுக்கு அவசர கடிதம்

#SriLanka #Mullaitivu #worship
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் - ரணிலுக்கு அவசர கடிதம்

முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் நேற்று அனுப்பிய கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.