லண்டனில் மசூதிகளை தாக்க சதித்திட்டம் - 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு
தெற்கு லண்டனைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மீது, "தீவிர வலதுசாரி பயங்கரவாதம்" தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மசூதிகளைக் குறிவைக்கும் சதித்திட்டம் தொடர்பாக காவல்துறை நடத்திய சோதனையில் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்கு குற்றவியல் சேதம் விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் அந்தச் சிறுவன் ஜூலை 9 அன்று கைது செய்யப்பட்டான்.
ஆனால், அவனது முகவரிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, "கவலைக்குரிய பல ஆவணங்களைக்" கண்டறிந்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மசூதிகள் தொடர்பு கொள்ளப்பட்டு, சிறப்பு அதிகாரிகளால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சதித்திட்டம் தொடர்பாக வேறு எந்த சந்தேக நபர்களையும் தேடவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
“இது ஒரு இளம் சிறுவன் மீதான மிகவும் கடுமையான பயங்கரவாதக் குற்றச்சாட்டாகும். இது பொதுமக்களுக்கும் உள்ளூர் சமூகத்திற்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தக்கூடும் என்று லண்டன் பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையின் தலைவர் ஹெலன் ஃபிளானகன் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே