பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு தீ வைத்த 5 பேருக்கு விளக்கமறியல்

Prathees
2 years ago
பிரசன்ன ரணதுங்கவின்  வீட்டுக்கு தீ வைத்த 5 பேருக்கு விளக்கமறியல்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொட பிரதேச சபையின் தலைவர் குமார அரங்கல்ல மற்றும் மினுவாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஹசந்த லக்மால் பெரேரா ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில். சந்தேகநபர்கள் ஐவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று (14) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை  எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் இந்திராணி அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.