இலங்கையில் தாக்குதல் நடத்த முன்னாள் போராளிகள் திட்டம்- பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை!

Nila
2 years ago
இலங்கையில் தாக்குதல் நடத்த முன்னாள் போராளிகள் திட்டம்- பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்தியாவின் ஊடகமொன்று நேற்றையதினம் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

குறித்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென’ பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த செய்தி தொடர்பில்அரசியல் தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.