நாளை 3 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு ஏற்படுத்தப்படுமென தகவல்.

#SriLanka #Power #Time
நாளை 3 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு ஏற்படுத்தப்படுமென தகவல்.

நாளை 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஏ முதல் எல் வரையிலும், பி முதல் டபிள்யூ வரையிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

சிசி மண்டலத்திற்கு மாலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கும். எம், என், ஓ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.