பதுக்கலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
2 years ago
 பதுக்கலுக்கு எதிராக  மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

நோர்வூட் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாவனையாளர்களால் வீதியை  மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீண்ட நாட்களுக்கு பின் நோர்வூட் பகுதிக்கு சமையல் எரிவாயு நேற்று (03) விநியோகம் செய்யப்பட்டது. இந்த எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இந்நிலையில் சிலருக்கு மாத்திரம் எரிவாயு வழங்கப்பட்டதையடுத்து, எரிவாயு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், எரிவாயு பாவனையாளர்கள் சிலிண்டர்களை வீதியின் குறுக்கே வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் தலையிட்டு பதுக்கி வகைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!