டெங்கு பரவலால் மூடப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தை மீளத் திறக்க நடவடிக்கை!
#SriLanka
#Colombo
#University
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழக வளாகம் இன்று சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைப் பராமரிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே