வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போது கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருள் சிக்கன வாகனங்களின் விலை குறைவதற்கான அறிகுறியே இல்லை என முதன்முறையாக கார் வாங்க முற்படும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!