கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல்
Kanimoli
2 years ago
வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணங்கள்
இதன்போது அவ் நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.