இரண்டு அபிலாஷைகளுடன் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பசில்

Nila
2 years ago
இரண்டு அபிலாஷைகளுடன்  அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இரண்டு அபிலாஷைகளுடன் தான் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியதாக தெரிவித்தார். 

ஒன்று தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது, இரண்டாவது 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் உயர் பதவியில் அமர்த்துவதாகும்.

இந்நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தாம் பொறுப்பேற்கவில்லை என்றும், ஆனால் ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்தவர்கள் உட்பட அனைவரும் இதற்கு பொறுப்பு என அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாற கூறியுள்ளார்.

எனக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது என் மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்தனர், அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் லட்சியமாக இருந்தது.  கடந்த வாரம் நான் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டேன். 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நானே காரணம் என எனக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டும் இருந்தது.அதனால் அவரை மீண்டும் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் உயர் பதவியில் அமர்த்த விரும்பினேன். 

என் எதிர்பார்ப்புகள் இரண்டும் நிறைவேறியது. மேற்குறிப்பிட்ட இரண்டு இலட்சியங்களை அடைவதைத் தவிர பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அல்லது நிதியமைச்சர் பதவியை கைப்பற்றும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!