கடும் வெப்பமான வானிலை - வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#NorthernProvince
#heat
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வெப்பமான வானிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலையானது உச்சம் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த மாவட்டங்களின் சில பகுதிகளில், பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, "கவனம்" தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே