சுரங்க பணியாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 நபர்கள் உயிரிழப்பு

#Death
Prasu
4 years ago
சுரங்க பணியாளர்களிடையே ஏற்பட்ட  மோதலில் 14 நபர்கள் உயிரிழப்பு

பெரு நாட்டில் சுரங்கப் பணியாளர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 14 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு என்னும் தென்னமெரிக்க நாட்டிலுள்ள அரேக்விபா என்னும் இடத்தில் தங்க சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குழுக்களுக்கிடையே திடீரென்று சண்டை ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது.

இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த மோதலில் பல பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4