மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு

Prabha Praneetha
2 years ago
மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

மேலும், மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள பகுதிகளில் இவ்வாறு மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.


கடும் வரட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஆற்று மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிா்துள்ளனர்.

இதற்கமைய, இறால் ஒரு கிலோ 1600 ரூபாவாகவும், கணவாய் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும், செப்பலி (கோல்டன்) ஒரு கிலோ 900 ரூபாவாகவும், மீசை பனையான் ஒரு கிலோ 600 ரூபாவாகவும், மணலை மீன் 1400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது.

கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் கொண்டு வரப்படுகின்ற மீன்களின் வகைகள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!