முகக்கவசம் கட்டாயம் இல்லை! ஆனால் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றவும்

Prathees
4 years ago
முகக்கவசம் கட்டாயம் இல்லை! ஆனால் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றவும்

நாட்டில் நாளாந்தம் 10 முதல் 15 கொவிட் நோயாளிகள் பதிவாகி வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென்றாலும், சுகாதாரமான நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹோமந்த ஹேரத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்றுநோய் இருப்பதை மக்கள் மறந்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி ஹேமந்த ஹேரத்,

உலகில் கோவிட் இன்னும் அழியவில்லை. பிற நாடுகளில் இருந்தும் கோவிட் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.

கோவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, நம் நாட்டில் இருந்தும் கோவிட் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.

சிலருக்கு இப்போது கோவிட் நினைவில் இல்லை.

சமூகத்தில் சுகாதார நடைமுறைகளை மறந்துவிடும் போக்கு உள்ளது.

எனவே, முகமூடி அணிவது கட்டாயமில்லை என்றாலும், 20 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல் மற்றும் ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணுதல் போன்ற இந்த சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

அதன் மூலம் அனைவரும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4