நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Kanimoli
2 years ago
நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்குப் புல்வெட்டுவதற்குப் பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பேரின்பராசா பிரதீபன்(வயது-29)என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பயணித்த துவிச்சக்கர வண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!