குடிவரவு திணைக்களத்திற்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Prathees
2 years ago
குடிவரவு திணைக்களத்திற்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றுவரை, இந்த சேவையின் கீழ் தினசரி அதிகபட்சமாக 2,000 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இன்று முதல், வரம்பு 3,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாளொன்றுக்கு இரண்டு ஷிப்ட்களில் நியமிக்கப்பட்டு பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

இது காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்காலிகமாக 03 மாத காலம் பணிபுரிந்து வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அனுபவமிக்க அதிகாரிகளை மீள் நியமனம் செய்a 
பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாஸ்போர்ட்டுக்கு புகைப்படம் எடுக்கும் கணினி அமைப்பின் திறன் அதிகமாக இருப்பதால், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில இடங்களில் புகைப்படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த தடைகளை போக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போதுள்ள கொள்ளளவை அதிகரித்து வாடகை அடிப்படையில் புதிய முறைமையை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தமது கடவுச்சீட்டுக்கு தேவையான புகைப்படங்களை எவ்வித தடையுமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் சேவையை பெற்றுக்கொள்ள வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சேவைகளை வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!