உலகின் பலம்மிக்க நாடுகளுக்கு இரையாகியுள்ள இலங்கை -நளின் பண்டார

Nila
2 years ago
உலகின்  பலம்மிக்க நாடுகளுக்கு இரையாகியுள்ள இலங்கை -நளின் பண்டார

உலகில் பலம் மிக்க நாடுகளுக்கு இரையாகவே இலங்கை உள்ளது என்பதற்கு இதுவொரு தக்க சான்றாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எம்.சி.சி. பெர்னாண்டோ 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மின்சக்தி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

எனவே எம்.சி.சி.பெர்னாண்டோ என்பவர் விளையாட்டுப் பொருள் அல்ல. நுரைச்சோலை மின் உற்கத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் இவரே மின்சக்த அமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.

நுரைச்சோலை மின் உற்கத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் 23 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் பிரபலமாக பேசப்பட்டது.

எனவே இவர் சிறு குழந்தை அல்ல. மன்னார் மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தம் பிரயோகித்ததாக இவர் கோப் குழுவில் தெரிவித்தார்.

இவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகவும் பாரதூரமானதாகும். இவரால் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்தினால் இலங்கையில் மாத்திரமின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சகலரும் கலவரமடைந்தனர்.

அதனையடுத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றை இட்டு இதனை நிராகரித்தார்.

எனினும் பின்னர் தனக்கு காணப்பட்ட பதற்ற நிலைமையால் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறி , தான் தெரிவித்த கருத்தினை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த வசனம் தவறுதலாக வெளிவந்ததல்ல. இவரால் இவ்வாறானதொரு கருத்து வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னைய தினத்தில் பாராளுமன்றத்தில் மின்சாரசட்ட திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம் இந்த காரணிளாலேயே ஆகும்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை மேம்படுத்துவதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எனினும் இதனைக் காண்பித்து மின்உற்பத்தி கட்டமைப்பை தமது சகாக்களுக்கு வழங்குவதற்கும் , சர்வதேசத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையே நாம் எதிர்க்கின்றோம். உலக பலவந்த நாடுகளின் இரையாகியுள்ளது என்று கூறுவதற்கு புதிய சாட்சிகள் தேவையில்லை என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!