3 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடைபெறும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா.- (படங்கள்)
Prabha Praneetha
2 years ago
3 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடைபெறும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா பரவலின் காரணமாக சுமார் 3 வருடங்களாக நடைப்பெறாத கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது.
மக்கள் பல பிரதேசங்களிலிருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பல வகையான தின்பண்டப்பொருட்களை வியாபாரிகள் விற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
பலத்த பாதுகாப்புடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
5 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூபப்பவனி ஆரம்பமாகின்றது.