திருடர்கள் இருக்கும் வரை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்!

Mayoorikka
2 years ago
திருடர்கள் இருக்கும் வரை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்!

அரசாங்கம் என்ன கூறினாலும் நாட்டில் இன்னும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை எனவே கடன் வாங்குவதற்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் வழங்குவதை ஒத்திவைத்து, வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிக டாலர்களை பெற வேண்டும் என்றும், நாட்டில் திருடர்கள் இருக்கும் வரை மக்கள் டாலர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாதாந்தம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு வருமானம் தற்போது 200 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நம்பகத்தன்மையான ஆட்சி தேவை எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!