பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

Kanimoli
2 years ago
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது தெரிவித்தது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில், சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களிடமும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் கலாசாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடிய பிரதமர் விக்ரமசிங்க, காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள சுற்றுலாத் தடைகளை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை வற்புறுத்துவதற்கு இராஜதந்திர சமூகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!