பஹாமாஸில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணம்
பஹாமாஸில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரமான சம்பவம், தீவுக்கூட்டத்தின் தலைநகரான நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் அமைந்துள்ள வடக்கு ஆண்ட்ரோஸில் நிகழ்ந்தது.
பஹாமியப் பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ், ஆரம்பத்தில் ஒருவர் உயிர் தப்பியதாகக் கூறியிருந்தார், ஆனால் பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், அவர் காயங்களால் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
பஹாமாஸின் 53வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருவதைக் குறிப்பிட்ட அவர், "நாம் பெரும் துயரத்தின் நிழலில் கூடி இருக்கிறோம். இது ஒரு துக்க நாளாக மாறியுள்ளது. தாங்கள் நேசிக்கும் ஒருவர் இனி வீடு திரும்ப மாட்டார் என்ற பேரழிவுச் செய்தியைப் பெற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும், எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பஹாமிய விமான விபத்து விசாரணை ஆணையம் ஒரு அறிக்கையில், அந்த விமானம் நஸ்ஸாவிலுள்ள லிண்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சான் ஆண்ட்ரோஸை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது.
அந்த விமானம், பஹாமாஸில் பதிவுசெய்யப்பட்ட செஸ்னா 402 ரக விமானம் என அது அடையாளம் கண்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே