ஓமன் நாட்டில் இந்திய தூதரகம் நடத்திய கண்கவர் யோகா நிகழ்ச்சி

ஓமன் நாட்டில் இந்திய தூதரகமானது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்கவர் யோகா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின வருடம். எனவே, அதனை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு யோகா தினம் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 75 இடங்களில் மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த இந்திய தூதரகங்கள் இணையதளத்தின் மூலம் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை அளிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, சுமார் 70 நாடுகளில் காலை 6 மணியிலிருந்து யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்திய தூதரகமானது கண்கவர் யோகா நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. ஓமன்



