ருவாண்டாவில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு!
Mayoorikka
2 years ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, நேற்று வியாழக்கிழமை ருவாண்டாவில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.
இதன்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் முக்கிய ஆதரவு குறித்து அவர் கலந்துரையாடினார்.
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.