வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்து கொள்வோம்

Nila
2 years ago
வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்து கொள்வோம்

மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூவிற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு நிறத்தில் ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களைக் கொண்ட செம்பருத்திப்பூவை மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருளில் ஏலக்காயும் அடங்கும். இந்த ஏலக்காயை எந்த பொருளோடு சேர்த்து வெள்ளிக்கிழமை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். வாசனை திரவியங்களில் பட்டியலில் பன்னீருக்கு எப்போதுமே முதலிடம். பெரிய பெரிய பூஜைகள் ஹோமங்கள் இதில் வைக்கும் கலச சொம்பில் கட்டாயமாக இந்த பன்னீரும் சேர்ந்திருக்கும். ஏனென்றால் கடவுளை வசியப்படுத்த கூடிய தன்மை இந்த பன்னீருக்கு அதிகமாகவே உள்ளது.

ஏலக்காயை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய எச்சில் படாத டம்ளரில் கொஞ்சமாக பன்னீரை ஊற்றி, அதில் ஏலக்காய் பொடியை போட்டு வெள்ளிக்கிழமை பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை இந்த பூஜையை செய்து விட்டு, அதன் பின் அந்த தண்ணீரை எடுத்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டில் மகாலட்சுமி நிறைந்திருப்பாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு விருப்பமான பல பொருள்கள் இருந்தாலும் நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருள்களின் பட்டியலில் செம்பருத்திப் பூ, ஏலக்காய், பன்னீர் இந்த மூன்று பொருட்களும் அடங்கும்.

முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது மகாலட்சுமிக்கு வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாசனை மிகுந்த தூபங்கள் போடுவதோடு, மகாலட்சுமிக்கு பச்சைக் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வதும் சிறப்பானது. இதற்கு ஆகக்கூடிய செலவும் அதிகம் கிடையாது.

வாரம்தோறும் மகாலட்சுமி பூஜையில் மேலே சொல்லப்பட்டுள்ள 3 பொருட்களை சேர்த்து வழிபாடு செய்வதால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரம் நீங்கி, மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க சொல்லப்பட்டுள்ள பல வழிகளில், இந்த பூஜை முறை சுலபமானது.