உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் குறித்து லிட்ரோ அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் குறித்து லிட்ரோ அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஜூலை 11) முதல் உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கும் என்றும், மற்ற பகுதிகளுக்கான விநியோகம் புதன்கிழமை (ஜூலை 13) முதல் தொடங்கும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்பி கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைப்பதைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் 2022 மே மாதத்திற்கான மின் கட்டணத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிற்குள் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச விலை ரூ. 4,910 மற்றும் அதிக விலைக்கு அல்லது பிற தரப்பினரிடமிருந்து வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

விநியோக மையங்கள் தொடர்பான தகவல்கள் அதன் சமூக ஊடகங்கள் மற்றும் Litro இணையத்தளத்தின் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

LP எரிவாயு விநியோகம் இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் (STF) ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அதேவேளை, பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.