கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

Nila
2 years ago
கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

கொழும்பு – புதுசெட்டித்தெரு, சங்மித்தா மாவத்தை பகுதியில் இன்று(12) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 29 வயதான நபரொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை கரையோர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.