14 மாவட்டங்களில் அவசர சேவையை இடைநிறுத்தியுள்ள 1990 அம்புலன்ஸ் சேவை

#SriLanka
Prasu
2 years ago
14 மாவட்டங்களில் அவசர சேவையை இடைநிறுத்தியுள்ள 1990  அம்புலன்ஸ் சேவை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசர அம்பியுலன்ஸ் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக 1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.

எனவே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பின்வரும் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தமது சேவை இடம்பெறாது என சுவசேரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இப்பகுதிகளில் மக்கள் ஏனைய சேவைகளை நாடுமாறும் கோரப்பட்டுள்ளது.