சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில் முதலிடத்தை பெற்று தமிழ் சிறுமி வரலாற்று சாதனை

#SriLanka
Prasu
2 years ago
சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில் முதலிடத்தை பெற்று தமிழ் சிறுமி வரலாற்று சாதனை

இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான சிறுமி தியாகராஜா பிரனிர்ஷா.

இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சுமார் 6 மாத காலமாக நடைபெற்ற இந்த போட்டியில், நூற்றுக்கணக்கான சிங்கள சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ், சிங்களம், இந்தி என மூன்று மொழிகளிலும் பாடும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.