ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்!

Mayoorikka
2 years ago
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்!

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று காலை வரை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்பட்டிருந்தது.

ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், தாம் கைப்பற்றியுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.